செங்கல்பட்டு மாவட்டம் வண்டலூர் கேளம்பாக்கம் சாலையில் ஆகஸ்ட் 12 இன்று முதல் காலை 7 மணி முதல் 11 மணி வரையும், மாலை 4 மணி முதல் இரவு 10 மணி வரையும் கனவாக வாகனங்கள் செல்வதற்கு தடை விதிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. வண்டலூர் முதல் கேளம்பாக்கம் வரை உள்ள சாலையில் கல்லூரி மற்றும் பல்கலைக்கழகங்கள், அரசு பள்ளிகள் அதிக அளவில் இயங்கி வருகின்றன.

இதனால் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்துவதற்காக கனரக வாகனங்கள் காலை மற்றும் மாலை என குறிப்பிட்ட நேரங்களில் செல்வதற்கு தடை விதிக்கப்படுவதாக தாம்பரம் மாநகர காவல் துறை விளக்கம் தெரிவித்துள்ளது.