
மாநகரம் படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானவர் லோகேஷ் கனகராஜ். இவர் தன்னுடைய முதல் படத்திலேயே தன்னுடைய வெற்றியை பதிவு செய்தார். அடுத்ததாக கைதி எனும் பிளாக்பஸ்டர் வெற்றியை கொடுத்தார். இதனை தொடர்ந்து மாஸ்டர், விக்ரம் என தொடக்கத்திலேயே வெற்றி படங்களை மட்டுமே கொடுத்து வருகிறார். இவருடைய இயக்கத்தில் அடுத்ததாக உருவாகி வரும் படம் கூலி.
இந்த படத்தின் முதல் முறையாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்துடன் கைகோர்த்துள்ளார்லோகேஷ். இந்நிலையில் இன்று 39 ஆவது பிறந்தநாளை கொண்டாடும் லோகேஷின் சொத்து மதிப்பு மொத்தம் 100 கோடிக்கு மேல் இருக்கும் என்று சொல்லப்படுகிறது. மேலும் இவர் ஒரு படத்தை இயக்குவதற்கு 50 கோடி ரூபாய் சம்பளம் வாங்கி வருகிறாராம். ஆனால் இவை யாவும் அதிகாரப்பூர்வமான தகவல் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.