தஞ்சாவூர் மாவட்டம் மணப்படையூர் பெரியார் வீதியை சேர்ந்தவர் கலியமூர்த்தி. இவரது மகன் ரவிக்குமார் கூலி வேலை பார்த்து வந்துள்ளார். கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு மது குடித்துவிட்டு வீட்டிற்கு வந்த ரவிக்குமார் தனது குடும்பத்தினருடன் தகராறு செய்தார். நேற்று அதிகாலை ரவிக்குமார் சுந்தர பெருமாள் கோவில் ரயில் நிலையத்திற்கு சென்றுள்ளார்.

அப்போது சென்னை எழும்பூர் ராமேஸ்வரம் விரைவு ரயில் வந்தது. அந்த ரயிலில் பாய்ந்து ரவிக்குமார் தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று ரவிக்குமாரின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.