
நீலகிரி மாவட்டம் குன்னூரை சேர்ந்தவர் விஜய் கிருஷ்ணா. இவர் கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டத்தில் உள்ள மருத்துவமனையில் டாக்டராக வேலை பார்க்கிறார். கடந்த 2 நாட்களுக்கு முன்பு விஜய் கிருஷ்ணா தனது வாடகை வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். அவரது வீட்டு கதவு திறக்கப்படாமல் இருந்ததால் அக்கம் பக்கத்தினர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
அந்த தகவலின் படி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விஜய் கிருஷ்ணாவின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் அவர் தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.