![](https://www.seithisolai.com/wp-content/uploads/2024/07/9027b21e-77db-4613-a4c6-69dec1766ca8.-.jpeg)
சிவகங்கை மாவட்டம் காளையார் கோவில் பக்கத்தில் உள்ள நாச்சிகுளம் என்ற கிராமத்தைச் சேர்ந்தவர்கள் ஜெயசூர்யா மற்றும் சுபாஷ். அண்ணன் தம்பியான இவர்கள் இருவரையும் மர்ம கும்பல் ஒன்று வெட்டி கொலை செய்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்த கொலை சம்பவத்தை நேரில் பார்த்த அவர்களுடைய நண்பர்கள் இதுகுறித்து காவல் நிலையத்தில் தகவல் தெரிவித்தனர்.
இது குறித்து சம்பவம் இடத்திற்கு வந்த காவல்துறையினர் சடலங்களை மீட்டு உடற்கூறாய்வுக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து விசாரணையில் மஞ்சுவிரட்டு விழாவில் மாடு பிடிப்பதில் ஏற்பட்ட தகராறில் இந்த கொலை சம்பவம் நடந்துள்ளதாக போலீசார் கூறியுள்ளனர். இதனையடுத்து இந்த சம்பவத்தில் ஈடுபட்ட எட்டு பேர் கொண்ட மர்ம கும்பலை போலீசார் தீவிரமாக தேடி வருகிறார்கள்.