
திண்டுக்கல் மாவட்டம் கொசவபட்டியை சேர்ந்தவர் ஈஸ்வரமூர்த்தி. இவர் அஞ்சல் அலுவலகத்தில் தபால்காரராக வேலை பார்த்து வந்துள்ளார். இந்த நிலையில் ஈஸ்வரமூர்த்தி ஒட்டன்சத்திரம்- தாராபுரம் சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த தனியார் பேருந்து ஈஸ்வரமூர்த்தி ஓட்டி சென்ற இருசக்கர வாகனம் மீது மோதியது.
இந்த விபத்தில் படுகாயமடைந்த ஈஸ்வரமூர்த்தி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று ஈஸ்வர் மூர்த்தியின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.