கிராம நிர்வாக அலுவலர்களுக்கு பாதுகாப்பு வழங்க சட்டம் இயற்றக்கோரி தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், மருத்துவர்கள், மருத்துவமனைகள் மீது தாக்குதலை தடுக்கும் பாதுகாப்பு சட்டம் போல, 12,500க்கும் மேற்பட்ட கிராம நிர்வாக அலுவலர்களின் பாதுகாப்புக்கு தனி சட்டம் இயற்றக்கோரிய மனுவை பரிசீலித்து உத்தரவு பிறப்பிக்க அரசுக்கு உத்தரவிட்டு வழக்கை முடித்துவைத்தது