
தமிழகத்தில் பொங்கல் பரிசாக ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை மற்றும் ஒரு முழு கரும்பு போன்றவைகள் ரேஷன் கடைகள் மூலமாக வழங்கப்பட உள்ளது. அதன்பிறகு இலவச வேஷ்டி சேலைகளும் வழங்கப்பட இருக்கிறது. அரிசி அட்டைதாரர்கள் 2.20 கோடி பேருக்கு பொங்கல் பரிசு வழங்கப்படும் நிலையில் இலங்கைத் தமிழர் முகாமில் வசிப்பவர்களுக்கும் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 3ஆம் தேதி முதல் பொங்கல் பரிசு தொகுப்பு பெறுவதற்கான டோக்கன் வீடு வீடாக சென்று வழங்கப்படும் நிலையில் அதனை பெற தவறியவர்கள் ரேஷன் கடைகள் மூலமாக பெற்றுக் கொள்ளலாம். இந்நிலையில் ஜனவரி 9-ம் தேதி முதல் ரேஷன் கடைகளில் பொங்கல் பரிசுத்தொகுப்பு விநியோகம் செய்யப்படும் நிலையில் இந்த தொகுப்பை பெறுவதற்கு ரேஷன் அட்டைதாரர்கள் கண்டிப்பாக நேரில் வரவேண்டும் என்று அரசு அறிவித்துள்ளது. மேலும் நேரில் சென்று கைரேகை பதிவு செய்பவர்களுக்கு மட்டும்தான் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.