
கொல்காப்பூரில் இருந்து மும்பை செல்லும் மகாலட்சுமி விரைவு ரயிலில் பாத்திமா என்ற இஸ்லாமிய கர்ப்பிணி பெண் ஒருவர் பயணம் செய்துள்ளார். இந்த நிலையில் திடீரென்று அந்த பெண்ணுக்கு பிரசவ வலி ஏற்பட்டு ரயிலிலேயே குழந்தை பிறந்துள்ளது. இதனையடுத்து ரயிலின் ஞாபகார்த்தமாக அந்த குழந்தைக்கு மகாலட்சுமி என்று பெயரிடப்பட்டுள்ளது.
பாத்திமா கழிவறைக்கு சென்றபோதுதான் குழந்தை பிறந்துள்ளது. அதன் பிறகு கர்ஜாட் ரயில் நிலையத்தில் ரயிலை நிறுத்தி தாயையும் சேயும் ஆஸ்பத்திரியில் அனுமதித்துள்ளனர். பாத்திமாவிற்கு ஏற்கனவே மூன்று ஆண் குழந்தைகள் உள்ள நிலையில் தற்போது பெண் குழந்தை பிறந்துள்ளது அவருக்கு மகிழ்ச்சி ஏற்படுத்தி உள்ளதாக கூறப்படுகிறது.