
ஈரோடு கிழக்கு தொகுதியில் வருகின்ற பிப்ரவரி 27ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சியினரும் தீவிரப் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் வருகின்ற 25-ம் தேதி மாலை 5 மணி உடன் பிரசாரம் நிறைவு பெறுகிறது. ஈரோடு கிழக்கு தொகுதியில் பிப்ரவரி 25ஆம் தேதி மாலை 5 மணிக்கு மேல் வெளி மாவட்ட நபர்கள் யாரும் இருக்கக்கூடாது என்றும் மாலை 5 மணியுடன் வெளி மாவட்ட நபர்கள் வெளியேறிவிட வேண்டும் என்றும் தேர்தல் அலுவலர் சிவகுமார் தெரிவித்துள்ளார்.