மதுரை மாவட்டத்திலுள்ள சீகுப்பட்டி கிராமத்தில் கட்டிட தொழிலாளியாக வேலை பார்த்த மணிகண்டன் என்ற 35 வயது நபர் வசித்து வந்துள்ளார். இவருக்கு கடந்த 10 வருடங்களுக்கு முன்பாக திருமணம் நடைபெற்ற நிலையில் கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டதால் இருவரும் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர்.

அதன் பிறகு மணிகண்டன் தன் பெற்றோருடன் வசித்து வந்த நிலையில் அவருக்கு அதே பகுதியைச் சேர்ந்த மயிலம்மாள் என்ற 45 வயது பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டது. இவர் தூய்மை பணியாளர். இந்த பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறியதால் மயிலம்மாள் தன் கணவனை பிரிந்து மணிகண்டனுடன் தனியாக குடும்பம் நடத்தி வந்தார்.

இதில் மயிலம்மாலை அவருடைய கணவர் மற்றும் உறவினர்கள் கண்டித்த நிலையில் மணிகண்டனையும் வயது மூத்த பெண்ணுடன் உறவு கொள்ளக்கூடாது என்று அவருடைய குடும்பத்தினர் கண்டித்துள்ளனர். இதனால் அவர்கள் சம்பவநாளில் வீட்டை விட்டு வெளியேறினர். இவர்கள் இருவரையும் உறவினர்கள் தேடிய நிலையில், அருகே உள்ள ஒரு வேப்ப மரத்தில் இருவரும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.

இது தொடர்பாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில் அவர்கள் சம்பவ இடத்திற்கு வந்து அவர்களின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து போலீசார் விசாரணை நடத்திவரும் நிலையில் இந்த சம்பவம் பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.