உலக அளவில் உள்நாட்டு உற்பத்தியில் அடிப்படையில் தரவரிசைப்படுத்தப்பட்டுள்ள ஒவ்வொரு நாடுகளும் எந்த இடத்தில் இருக்கின்றது என்பது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம். ஏழ்மையின் அடிப்படையில் உலக நாடுகள் சில பட்டியலிடப்பட்டுள்ளன. அதன்படி தெற்கு சூடான் நாடு ஏழ்மையில் முதலிடத்தில் உள்ளது. இது ஒரு சிறிய கிழக்கு ஆப்பிரிக்க நாடாகும். இங்கு ஒரு கோடிக்கும் அதிகமான மக்கள் வசித்து வருகிறார்கள். அடுத்ததாக கிழக்கு ஆப்பிரிக்காவில் நிலத்தால் சூழப்பட்ட ஒரு சிறிய நாடு தான் புருண்டி. இந்த நாடு உலகின் ஏழ்மையான நாடுகளின் பட்டியலில் இரண்டாவது இடத்தில் உள்ளது.

அடுத்ததாக மத்திய ஆப்பிரிக்க குடியரசு நாட்டில் 5,849,358 மக்கள் தொகை மட்டுமே உள்ளது. இது உலகின் ஏழ்மையான நாடுகளின் பட்டியலில் மூன்றாவது இடத்தில் உள்ளது. இந்த நாட்டில் தங்கம், எண்ணெய், யுரேனியம் மற்றும் வைரங்கள் நிறைந்த இருப்பு அதிகமாக உள்ளது. ஆனால் அரசியல் ஆளுமை மற்றும் ஆயுத மோதல்கள் ஆகியவை இருப்பதால் 80 சதவீத குடிமக்கள் வறுமை கோட்டிற்கு கீழே வாழும் ஒரு தோல்வியுற்ற நாடாக உள்ளது.

அடுத்ததாக தென்கிழக்கு ஆப்பிரிக்காவில் அமைந்துள்ள மாலாவி நாடு உலக அளவில் நான்காவது ஏழ்மையான நாடாக உள்ளது. இதனைத் தொடர்ந்து கிழக்கு ஆப்பிரிக்காவில் மக்கள் தொகை குறைவாக உள்ள நாடு தான் மொசாம்பிக். இந்த நாடு ஏழ்மையான நாட்டின் பட்டியலில் ஐந்தாவது இடத்தில் உள்ளது. இங்கு கூடுதலாக இயற்கை பேரழிவுகள், நோய்கள், குறைந்த விவசாய உற்பத்தி திறன் மற்றும் செல்வ சமத்துவமின்மை ஆகியவற்றால் பெரிதும் பாதிப்பு ஏற்படுகின்றது.