
தென்மேற்கு வங்கக்கடல், லட்சத்தீவு மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக இன்று தமிழகத்தில் பல்வேறு இடங்களில் பரவலாக மலை பெய்தது. நேற்றும் தூத்துக்குடி மாவட்டத்தில் கனமழை வெளுத்து வாங்கியது. மேலும் சில பகுதிகளில் இடியுடன் கூடிய கனமழை பெய்தது.
இந்நிலையில் நாளை தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் கன முதல் மிக கனமழைக்கான ஆர்ஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது