
உத்திரபிரதேசம் மாநிலத்தில் உள்ள பிஜ்னோர் என்ற பகுதியில் ஆதேஷ் தேவி என்பவர் வசித்து வருகிறார். மனநலம் பாதிக்கப்பட்ட இவருக்கு நான்கு வயதில் ஒரு மகன் உள்ளார். இந்த நிலையில் வேலைக்குச் சென்ற கணவர் வீடு திரும்பிய போது மகன் இறந்து கிடப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். உடனே இது குறித்து போலீசில் புகார் அளிக்கப்பட்ட நிலையில் சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் உயிரிழந்த சிறுவனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதனைத் தொடர்ந்து சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து போலீசார் நடத்திய முதல் கட்ட விசாரணையில், தாய் தேவி குழந்தையின் கழுத்தை அறுத்து வீட்டில் இருந்த அடுப்பில் உடலை எரிக்க முயன்றது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வரும் நிலையில் இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.