
உத்திரபிரதேசம் மாநிலத்தில் கடந்த 25 ஆம் ஆண்டு பகுஜன் சமாஜ் கட்சி எம்எல்ஏ ராஜு பால் மர்ம நபர்களால் கொல்லப்பட்டார். இந்த வழக்கில் முன்னாள் எம் பி எம் முன்னாள் ரவுடியுமான ஆதிக் அகமது உள்ளிட்டோர் மீது வழக்கு தொடரப்பட்டது. இதனைத் தொடர்ந்து ஆதிக் அகமதுவின் மகன் ஆசாத் மற்றும் அவரின் கூட்டாளி குலாம் ஆகியோர் கடந்த 13ஆம் தேதி போலீஸாரால் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
இந்நிலையில் முன்னாள் எம்எல்ஏவும் பிரபல ரவுடியுமான ஆதி அகமதுவும் அவரின் சகோதரரும் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். இவர்கள் இரண்டு பேரும் நேற்று மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்ட நிலையில் இது தொடர்பாக மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்நிலையில் உத்தர பிரதேசம் மாநிலம் முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக முதல்வர் யோகி ஆதித்யநாத் உயர்மட்ட குழு விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார்.