
இந்தியாவில் மத்திய மற்றும் மாநில அரசு ஊழியர்களுக்கு ஒவ்வொரு வருடமும் விலைவாசி உயர்வை கருதி அகலவிலைப்படி உயர்வு வழங்கப்படுகிறது. அதன்படி தமிழக அரசு ஊழியர்களுக்கு ஜூலை மாதத்திற்கான அகல விலைப்படி அக்டோபர் மாதத்தில் 4 சதவீதம் உயர்வு வழங்கப்பட்டது. அதன்படி தற்போது தமிழக அரசு ஊழியர்கள் 46 சதவீதம் அகலவிலைப்படி பெற்று வருகிறார்கள்.
இந்த நிலையில் நடப்பு ஆண்டில் ஜனவரி மாதத்திற்கான அகலவிலைப்படி உயர்வு எப்போது என ஊழியர்கள் பெரும் எதிர்பார்ப்புடன் காத்திருக்கும் நிலையில் தமிழக அரசுக்கு போதுமான நிதி இல்லாததால் அகலவிலைப்படி உயர்வு வழங்கப்படுமா என்ற கேள்வி தற்போது எழுந்துள்ளது.