கோயம்புத்தூர் மாவட்டம் ரத்தினபுரி பி.எம் சாமி காலணியை சேர்ந்தவர் நல்ல சிவம். இவர் தனியார் நிதி நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்க்கிறார். இவரது மனைவி ராதாமணி விஸ்வநாதபுரத்தில் பள்ளிக்கூடம் மாணவர்களுக்கு டியூஷன் எடுத்து வருகிறார். இவர்களது ஒரே மகன் நதீன் (21) தனியார் இன்ஜினியரிங் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்து வந்தார். இந்த நிலையில் கல்லூரி முடிந்து வீட்டிற்கு வந்த நதீன் திடீரென தனது அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதனையடுத்து டியூஷன் முடிந்து வீட்டிற்கு வந்த ராதா மணி தனது மகன் தூக்கில் சடலமாக தொங்குவதை கண்டு கதறி அழுதார். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று நதீனின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் நதீன் தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்..