கிருஷ்ணகிரி மாவட்டம் சூட சந்திரம் கிராமத்தைச் சேர்ந்தவர் பத்ரி. இவருக்கு ப்ரீத்தம் (19), பவன் (17) என்ற இரண்டு மகன்கள் இருந்துள்ளனர். நேற்று காலை அண்ணன் தம்பி இருவரும் ஸ்கூட்டியில் பேளகொண்டபள்ளி நோக்கி சென்றனர்.

அவர்கள் மதகொண்டபள்ளி தனியார் பள்ளி அருகே சென்ற போது முன்னால் சென்ற தனியார் பேருந்தை முந்தி செல்ல முயன்றதாக தெரிகிறது. அப்போது எதிரே வந்த டெம்போ ஸ்கூட்டி மீது மோதியது. இந்த விபத்தில் தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்த அண்ணன், தம்பி இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று இரண்டு பேரின் உடல்களையும் மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.