சிவகங்கை மாவட்டம் மாத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் விஜய், இவர் நான்கு வருடங்களுக்கு முன்பாக பவித்ரா என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டுள்ளார். குடும்ப பிரச்சினை காரணமாக பவித்ரா 2 வருடங்களுக்கு முன்பாக தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதனை அடுத்து விஜய் கடந்த வருடம் இரண்டாம் திருமணம் செய்துள்ளார்.

இதனால் கோபத்தில் இருந்து வந்த பவித்ராவின் சகோதரர் வேல்பாண்டி அவரது அவருடைய நண்பர்களோடு சேர்ந்து தன்னுடைய மாமா விஜய் வீட்டிற்கு வந்து இருக்கிறார். அப்போது மாமா வீட்டில் இல்லாத காரணத்தால் அவருடைய சித்தப்பா வேல்முருகனை  சரமாரியாக வெட்டி கொலை செய்துள்ளார்.  இதனை அடுத்து தகவல் அறிந்த காவல்துறையினர் வேல்பாண்டி உட்பட ஐந்து பேரை கைது செய்துள்ளனர்.