
விருதுநகர் மாவட்டம் மானூர் இந்திரா நகர் காலனி சேர்ந்தவர் ராஜேஷ் கண்ணா(21). இவர் இருசக்கர வாகனம் பழுது நீக்கும் கடையில் ஊழியராக வேலை பார்க்கிறார். இந்த நிலையில் ராஜேஷ் கண்ணன் திடீரென தனது வீட்டில் தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று ராஜேஷ் கண்ணனின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து போலீசார் நடத்திய விசாரணையில் கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு நரிக்குடி பகுதியில் இருக்கும் ஏடிஎம் மையத்தில் கொள்ளை முயற்சி நடந்தது. இது தொடர்பாக சந்தேகத்தின் அடிப்படையில் ராஜேஷ் கண்ணன் உள்பட 4 பேரை போலீசார் விசாரணைக்கு அழைத்து சென்றனர். இந்த வழக்கில் சிவங்கையை சேர்ந்த சாமியப்பன் என்பவரை போலீசார் கைது செய்தனர். ஒருவேளை விசாரணைக்கு பயந்து ராஜேஷ் கண்ணன் தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது வேறு ஏதாவது காரணம் உள்ளதா? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.