மராட்டிய மாநிலத்தில் உள்ள பிவண்டி பகுதியில் 26 வயதான இளம் பெண் ஒருவர் வசித்து வருகிறார். இவர் தனது 31 வயதான காதலனிடம் தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு வற்புறுத்தியுள்ளார். ஆனால் அதற்கு அந்த வாலிபர் பல காரணங்களை கூறி மறுப்பு தெரிவித்தார். இந்நிலையில் கடந்த 16ஆம் தேதி பெண்ணின் வீட்டிற்கு அந்த வாலிபர் சென்றுள்ளார். அப்போது மீண்டும் அந்தப் பெண் தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு கேட்டுள்ளார். இதற்கு மீண்டும் அந்த வாலிபர் மறுப்பு தெரிவித்துள்ளார்.

இதனால் கோபமடைந்த அந்த இளம் பெண் வீட்டில் இருந்த  கத்தியை எடுத்து தனது காதலனின் அந்தரங்க உறுப்பில் தாக்கியுள்ளார். இதில் வாலிபர் வலியால் அலறி துடித்துள்ளார். அதன் பின் அவரே மருத்துவமனையில் சேர்ந்து சிகிச்சை பெற்றுள்ளார். பின் அவர் இதுகுறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் விரைந்து வந்த காவல்துறையினர் அந்த பெண்ணின் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.  இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.