புதுக்கோட்டை மாவட்டம் ஆண்டிபட்டி பகுதியைச் சேர்ந்தவர் மீனாட்சி. இவரது மகள் அலமேலு. கடந்த 18 ஆண்டுகளுக்கு முன்பு சத்யகுமார் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

இந்த தம்பதியினருக்கு 12 மற்றும் 9- ஆம் வகுப்பு படிக்கும் 2 மகன்கள் உள்ளனர். சத்யகுமார் அடிக்கடி தனது மனைவி மீது சந்தேகப்பட்டு தாக்கியதால் அவரை பிரிந்து கடந்த 15 ஆண்டுகளாக அலமேலு தனது தாயுடன் வசித்து வந்துள்ளார்.

கடந்த 4 நாட்களுக்கு முன்பு குமார் மனைவி மற்றும் மகன்களை பார்ப்பதற்காக வந்துள்ளார். அப்போது இருவருக்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்ட நிலையில் மீனாட்சி இருவரையும் சமாதானப்படுத்த முயன்றார்.

அப்போது கோபத்தில் குமார் விறகு கட்டையால் அடித்ததால் சம்பவ இடத்திலேயே மீனாட்சி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று மீனாட்சியின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் சத்யகுமாரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.