உத்திரபிரதேச மாநிலம் மிர்சாபூர் மாவட்டத்தில் 14 வயது சிறுவன் வசித்து வருகிறான். இந்த சிறுவன் கோடாரியால் தன்னைத்தானே தாக்கி கொண்டார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த சிறுவனின் தாத்தா பீதாம்பர், பாட்டி ஹீராவதி ஆகியோர் பேரனை தடுக்க முயற்சி செய்தனர். அப்போது பேரன் தாத்தா பாட்டி என்று பார்க்காமல் அவர்களையும் சிறுவன் கோடாரியால் சரமாரியாக வெற்றியுள்ளார். இதனால் இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று காயம் அடைந்த சிறுவனை மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இதனையடுத்து உயிரிழந்த பீதாம்பர், ஹீராவதி ஆகியோரின் உடல்களை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் நடத்திய விசாரணையில் அந்த 14 வயது சிறுவன் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்பது தெரியவந்தது. இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.