கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள மதுக்கரை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திற்கு எதிரே ஆட்டோ டிரைவரான ஜெபராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவர் அந்த பகுதியில் வசிக்கும் மாணவர், மாணவிகளை ஆட்டோவில் பள்ளிக்கு அழைத்து செல்வார். இந்த நிலையில் ஏழாம் வகுப்பு படிக்கும் மாணவியை நேற்று காலை வழக்கம் போல ஜெபராஜ் பள்ளியில் விடுவதற்காக ஆட்டோவில் அழைத்துச் சென்றார்.

ஆனால் பள்ளிக்கு செல்லாமல் மாணவியை தனது வீட்டிற்கு அழைத்துச் சென்று பாலியல் தொந்தரவு அளித்துள்ளார். இதனால் மாணவி சத்தம் போட்டு அழுதார்.  உடனே ஜெபராஜ் மாணவியை சமாதானப்படுத்தி இந்த விஷயத்தை யாரிடமும் சொல்லக்கூடாது என மிரட்டி பள்ளியில் இறக்கி விட்டு சென்றுள்ளார். பள்ளிக்கு தாமதமாக வந்த மாணவியிடம் ஆசிரியர்கள் காரணத்தை கேட்ட போது மாணவி தனக்கு நடந்த சம்பவத்தை கூறி அழுதார். இதுகுறித்து ஆசிரியர்கள் மாணவியின் பெற்றோருக்கு தகவல் தெரிவித்தனர்.

உடனே மாணவியின் பெற்றோர் பேரூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் ஜெபராஜை பிடித்து விசாரித்த போது அவர் மாணவியிடம் தவறாக நடக்க முயன்றது உறுதியானது. அவரை போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் அதிரடியாக கைது செய்தனர். இந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.