
கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள ரெட்டிபட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் ஏராளமான மாணவர்கள் படித்து வருகின்றனர். இங்கு திருப்பதி என்பவரது மகள் இந்துமதி ஆறாம் வகுப்பு படித்து வந்தார். நேற்று மாலை 4 மணிக்கு இந்துமதி சக மாணவிகளுடன் பள்ளி வளாகத்தில் ஓடிப் பிடித்து விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது திடீரென வாந்தி எடுத்து இந்துமதி மயங்கி விழுந்தார்.
இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த ஆசிரியர்கள் உடனடியாக இந்துமதியை மீட்டு உத்தங்கரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு இந்துமதியை பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். இதுகுறித்து போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.