மும்பையில் ஆன்லைனில் ஆர்டர் செய்த ஐஸ்கிரீமில் மனித விரல் இருந்த சம்பவம் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. மும்பையை அடுத்த மலாத் பகுதியில் வசிக்கும் பெண் ஒருவர் யூமோ பிராண்ட் ஐஸ்கிரீமை ஆன்லைன் மூலமாக ஆர்டர் செய்துள்ளார்.

அந்த ஐஸ்கிரீமை அவர் சாப்பிட்டுக் கொண்டிருந்தபோது நாக்கில் ஏதோ தட்டுப்பட்டதால் ஐஸ்கிரீமை உற்று நோக்கிய பெண்ணுக்கு பேரதிர்ச்சி காத்திருந்தது. துரிதமாக செயல்பட்ட பெண் மனித விரலுடன் இருந்த ஐஸ்கிரீமை புகைப்படம் எடுத்து உடனே காவல் நிலையத்திற்கு விரைந்தார். இதனைத் தொடர்ந்து ஐஸ் கிரீம் நிறுவனத்தின் மீது வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.