ஓகேனக்கல் காவிரி ஆற்றில் வினாடிக்கு 74,000 கன அடியாக அதிகரித்துள்ளது. நேற்றைய நிலவரப்படி வினாடிக்கு 65,000 கன அடியாக இருந்த நீர்வரத்து தற்போதைய நிலவரப்படி வினாடிக்கு 74,000 கன அடியாக உயர்ந்துள்ளது. இந்நிலையில் நீர்வரத்து காரணமாக சுற்றுலா பணிகளின் பாதுகாப்பு கருதி, பரிசல் இயக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

மேலும் அருவி மற்றும் மாற்றுப் பகுதியில் குளிக்கவும் மாவட்ட நிர்வாகத்தால் 7வது நாளாக தடை நீட்டிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே கடந்த 6 நாட்களாக சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிப்பிடத்தக்கது.