
குவைத்தில் தொழிலாளர்கள் குடியிருப்பில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
குவைத்தில் தொழிலாளர்கள் குடியிருப்பில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் தமிழர்கள் உட்பட 41 பேர் பலியாகி இருப்பதாக முதற்கட்ட தகவல் வெளியாகி உள்ளது. அதிகாலை 6 மணிக்கு இந்த பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
அந்தத் தீயை அணைக்கும் பணி தீவிரமாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.இந்நிலையில் தீ முழுவதுமாக அணைக்கப்படாத நிலையில் உயிரிழப்பு மேலும் அதிகரிக்க கூடும் என்ற அச்சம் எழுந்துள்ளது. இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.