
40 வயதுக்கு மேற்பட்டவர்கள் பதிவுபெற்ற மருத்துவரிடம் மருத்துவச் சான்றிதழ் பெற்ற பிறகேஓட்டுநர் உரிமம் பெறுவதற்கு புதிய விதிகள் அமலுக்கு வந்துள்ளது. ஒரு சில இடங்களில் போலி மருத்துவரிடம் சான்றிதழ் தயாரித்து சாரதி மென்பொருளில் பதிவேற்றம் செய்து உரிமம் பெற்ற நிகழ்வுகளும் நடைபெற்றன.
இது தமிழக அரசின் கவனத்திற்கு சென்றதால் தகுதி வாய்ந்த மருத்துவர்கள் தங்களுடைய மருத்துவ கவுன்சிலிங் பதிவு சான்று எண்ணை உள்ளீடு செய்து தங்களுடைய மருத்துவமனை விவரங்களை பதிவேற்றம் செய்து செல்போனுக்கு வரும் கடவுச்சொல்லை உள்ளீடு செய்த பிறகு தான் சான்றிதழ்களை பதிவேற்ற முடியும் என்ற புதிய விதியை கொண்டு வந்துள்ளது.