
தாய்லாந்தை சேர்ந்த தனத் என்ற நபர் தனக்கு நேர்ந்த மோசமான அனுபவம் குறித்து முகநூலில் பகிர்ந்துள்ளார். ஒருநாள் தனத் கழிவறையை பயன்படுத்திய போது அவரது அந்தரங்க உறுப்பில் கூர்மையான வலியை உணர்ந்துள்ளார். என்னவென்று பார்த்தவருக்கு பெரும் அதிர்ச்சி காத்திருந்தது. கழிவறையின் உள்ளே இருந்து பாம்பு ஒன்று அவரை கடித்திருந்தது.
இதனைத் தொடர்ந்து கழிவறையை சுத்தம் செய்ய பயன்படுத்தும் பிரஷ் மூலமாக தனத் அந்த 12 அடி நீள பாம்பை தாக்கி கொன்றுவிட்டார். பின்னர் தனத்தின் தந்தை அவரை மருத்துவமனைக்கு அழைத்து சென்ற நிலையில் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளார். இந்த சம்பவத்தை பகிர்ந்த தனத் அதன் பிறகு அந்த கழிப்பறையை தான் பயன்படுத்தவே இல்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.