
திருச்சி சூர்யாவை பாஜக நீக்கம் செய்து புதிய அறிக்கை வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், இதர பிற்படுத்தப்பட்டோர் அணியின் மாநில பொதுச் செயலாளராக திருச்சி சூர்யா கட்சியின் கட்டுப்பாட்டை மீறியும் கட்சிக்கு களங்கம் விளைவிக்கும் செயல்களில் ஈடுபட்டு வருவதால் மாநில தலைமையின் அறிவுறுத்தலின்படி கட்சியின் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் அவர் நீக்கப்படுகின்றார்.
ஆகவே கட்சியை நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் அவரிடம் கட்சி சார்பாக எந்த வித தொடர்பும் வைத்துக்கொள்ள வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுவதாக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.