பாகல்கோட்டை மாவட்டம் கடனகேரி பகுதியில் வசித்து வரும் லட்சுமி என்பவர் தனது கணவரை பிரிந்து 8 வயது மகளுடன் தனியாக வசித்து வருகின்றார். இதனிடையே மௌனேஷ் என்பவருடன் இவருக்கு பழக்கம் ஏற்பட்ட நிலையில் அந்த பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது. அந்த நபருக்கு ஏற்கனவே திருமணம் ஆகி மனைவியும் உள்ளார். இதனைத் தொடர்ந்து லட்சுமி அவருடன் கடந்த ஒன்றரை மாதங்களாக கணவன் மனைவி போல ஒரே வீட்டில் வசித்து வந்துள்ளார்.

இந்த நிலையில் லட்சுமியின் நடத்தையில் மௌனேஷுக்கு சந்தேகம் எழுந்த நிலையில் அவர்களுக்குள் அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் மவுனேஷ் கடந்த வாரம் வீட்டை விட்டு சென்றுள்ளார். இதனால் அவரின் செல்போன் எண்ணை லட்சுமி பிளாக் செய்து விட்டார். இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு லட்சுமியின் வீட்டுக்கு மௌனேஷ் வந்த நிலையில் லட்சுமி கதவை திறக்கவில்லை.

இதனால் ஆத்திரமடைந்த அவர் வீட்டின் ஜன்னலை திறந்து தான் வைத்திருந்த ஆசிட்டை ஜன்னல் வழியாக லட்சுமி மீது வீசியுள்ளார். அதன் பிறகு அங்கிருந்து தப்பி சென்று விட்டார். இதனால் லட்சுமியின் இடது கண் மற்றும் முகத்தில் பலத்த காயம் ஏற்பட்டது. அவருடைய 8 வயது மகளுக்கும் காயம் ஏற்பட்ட நிலையில் லட்சுமி கொடுத்த புகாரை தொடர்ந்து போலீசார் வழக்கு பதிவு செய்து கள்ளக்காதலனை கைது செய்துள்ளனர்.