
தென்காசி மாவட்டத்தில் உள்ள குலையனேரி பகுதியில் முருகன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சிவசக்தி (14) என்ற மகன் இருந்துள்ளார். இந்த சிறுவன் தன்னுடைய நண்பர்களை பார்ப்பதற்காக நேற்று சுரண்டைக்கு சென்றுள்ளார். அப்போது திடீரென பலத்த காற்றுடன் கனமழை பெய்தது. இதனால் நனையாமல் இருப்பதற்காக சிறுவன் மரத்தடியில் ஒதுங்கியுள்ளதாக கூறப்படுகிறது.
அப்போது திடீரென மின்னல் தாக்கியதால் சிறுவன் பரிதாபமாக உயிரிழந்தான். இது குறித்த தகவலின் பேரில் சுரண்டை காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று சிறுவனின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.