
அமர்நாத்தில் உள்ள பனி லிங்கத்தை தரிசனம் செய்ய கடந்த ஜூன் 29ஆம் தேதியிலிருந்து பக்தர்கள் புனித யாத்திரை மேற்கொண்டு வருகிறார்கள். இந்த நிலையில் மோசமான வானிலை மற்றும் தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக அமர்நாத் யாத்திரை தற்காலிகமாக நிறுத்தப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பால்தால் மற்றும் பஹல்காம் ஆகிய இரண்டு வழிகளில் பக்தர்கள் யாத்திரை மேற்கொண்டு வருகிறார்கள். இரண்டு இடங்களிலும் முகாம் அமைக்கப்பட்டு அங்கிருந்து பக்தர்கள் பாதயாத்திரை செல்கின்றனர். வானிலை சீரடைந்த பின்னர் அமர்நாத் யாத்திரை தொடரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.