கர்நாடகாவில் காங்கிரஸ் ஆட்சி அமைப்பதை யாராலும் தடுக்க முடியாது என்று காங்காஷின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கூறியுள்ளார். கர்நாடக மாநிலத்தில் வருகின்ற மே 10ஆம் தேதி சட்டப்பேரவை தேர்தல் நடைபெறுவதை முன்னிட்டு அனைத்து கட்சிகளும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. அதன்படி கல்புர்கி மாவட்டத்தில் நடந்த பொதுக் கூட்டத்தில் கொட்டும் மழையிலும் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி பேசினார்.

அப்போது, கர்நாடகாவில் காங்கிரஸ் நிச்சயம் வெற்றி பெறுவோம். காங்கிரஸ் ஆட்சியை யாராலும் தடுக்க முடியாது. பாஜக 40 என்ற எண்ணை மிகவும் விரும்புகிறது. அதனால் அக்கட்சி 40 இடங்களை மட்டும் அளிக்க மக்கள் முடிவு செய்து விட்டனர். இது உறுதியாகிவிட்டது. ஆனால் காங்கிரஸ் 150 இடங்களில் வெற்றி பெறுவது உறுதி. நாங்கள் ஆட்சிக்கு வந்ததும் மாநிலத்தில் காலியாக உள்ள ஐம்பதாயிரம் பணியிடங்களை நிரப்புவோம். மேலும் ஐடிடி- கள் மற்றும் ஐஐஎம்- கள் வரும் வகையில் சிறப்பு கல்விக் கொள்கையை அமைப்போம் எனவும் மக்களுக்கு சிறப்பு பலன்களை வழங்குவதாகவும் ராகுல் காந்தி உறுதியளித்துள்ளார்.