
சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உணவகம் ஒன்று செயல்படுகிறது. இங்கு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வரும் பொது மக்களும் பல்வேறு துறைகளில் வேலை பார்க்கும் அதிகாரிகளும், அலுவலர்களும் வந்து தேனீர் அருந்துவது, உணவு சாப்பிடுவது வழக்கம். நேற்று உணவகத்திற்குள் பாம்பு நுழைந்ததை பார்த்ததும் சாப்பிட்டுக் கொண்டிருந்தவர்கள் அலறியடித்துக் கொண்டு ஓட்டம் பிடித்தனர்.
இதனையடுத்து அங்கிருந்த ஒருவர் உணவகத்திற்குள் நுழைந்த பாம்பை நைசாக வெளியே துரத்தினார். அந்த பாம்பு அங்கிருந்து ஊர்ந்து சென்று மறைவான இடத்திற்குள் சென்று விட்டது. இந்த சம்பவம் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.