
தமிழ் சினிமாவில் அந்நியன் திரைப்படத்தின் மூலமாக பிரபலமானவர் நடிகை சதா. இவர் தன்னுடைய முதல் படத்திலிருந்து (ஜெயம்) ரசிகர்களிடையே நல்ல பிரபலமாகி விட்டார். அதன்பின் எதிரி, உன்னாலே உன்னாலே, திருப்பதி, அந்நியன் போன்ற பல படங்களிலும் நடித்தார். அதன்பிறகு சினிமாவில் சரிவர வாய்ப்புகள் கிடைக்காததால் நான்கு வருட இடைவெளிக்கு பிறகு வடிவேலு கதாநாயகனாக நடித்த எலி படத்தின் மூலம் ரீ-என்ட்ரி கொடுத்தார். இதற்கிடையில் 2018 ஆம் வருடம் தயாரிப்பாளராக உருவெடுத்த இவர் டார்ச் லைட் என்ற திரைப்படத்தில் நடித்து தயாரித்திருந்தார்.
இந்த படமும் பெரிய அளவில் கை கொடுக்கவில்லை. இந்த நிலையில் 39 வயதை ஆகியும் திருமணம் செய்து கொள்ளாமல் இருப்பதற்கு காரணம் குறித்து பேட்டியில் பேசியுள்ளார் சதா, அதாவது திருமணம் செய்துகொண்டு, தனது சுதந்திரத்தை இழக்க விரும்பவில்லை என கூறியுள்ளார். ஜெயம், அந்நியன் போன்ற பல படங்களில் நடித்துள்ள சதா, 40 வயதாகியும் திருமணம் செய்துகொள்ளவில்லை. இதுகுறித்து மனம் திறந்துள்ள அவர், தற்போது சுதந்திரமாக வாழ்கிறேன் எனக் கூறியுள்ளார். மேலும், மனதுக்கு பிடித்த நபர் இதுவரை கிடைக்கவில்லை, அவ்வாறு கிடைத்தால் அவரை திருமணம் செய்துகொள்வேன் எனவும் சதா தெரிவித்துள்ளார்.