
தெலுங்கானா மாநிலம் ஹனம்கொண்டாவில் உள்ள ஜூனியர் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்த மாணவி ஒருவர் கல்லூரி மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார். இந்த மாணவி இறப்பதற்கு முன்பு தனது தோழிக்கு எழுதி வைத்திருந்த தற்கொலை கடிதம் ஒன்று வெளியாகி உள்ளது. அதில், உன்னிடம் சொல்லாமல் போனதற்கு மன்னித்துவிடு, நீதான் என்னோட பெஸ்ட் பிரண்ட், கடந்த மூன்று மாசமா எனக்கு உடம்பு சரியில்லை, என்னால் ஒழுங்கா படிக்க முடியல, படிப்புல முழுசா என்னால கவனம் செலுத்த முடியல என வேதனையுடன் அவர் தெரிவித்துள்ளார்.