
கள்ளக்குறிச்சி கருணாபுரம் பகுதியில் கள்ள சாராயம் குடித்த நான்கு பேர் இன்று ஒரே நாளில் உயிரிழந்த சம்பவம் தமிழகத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உடல் நலம் பாதிக்கப்பட்ட பத்துக்கும் மேற்பட்டோர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்கள். நான்கு பேரில் இரண்டு பேரும் கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்ததாக போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது. மற்றவர்களும் கள்ளச்சாராயம் குடித்ததால்தான் உயிரிழந்தார்களா என்ற கோணத்தில் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.