
கள்ளநோட்டு கைமாற்றம் செய்தது தொடர்பாக இரண்டு பேர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். சென்னை கோயம்பேட்டில் கள்ள நோட்டுகளை கைமாற்றம் செய்ய முயன்ற இரண்டு பேரை போலீசார் கையும் களவுமாக பிடித்துள்ளார்கள். அவர்களிடமிருந்து ரூ.6 லட்சம் பேப்பர் நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
காவல்துறையினர் மாறுவேடத்தில் சென்று குற்றவாளிகளை மடக்கிப் பிடித்துள்ளார் இதே போல், திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை, அய்யலூர், குஜிலியம்பாறை உள்ளிட்ட பகுதிகளில் கள்ளநோட்டுகள் புழக்கத்தில் விடப்படுவதாக புகார் எழுந்து வருகிறது.