காதலியை சுட்டுக்கொன்று விட்டு காதலனும் சுட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கொல்கத்தாவை சேர்ந்த ராகேஷ் குமார் ஷா மற்றும் நிக்கு குமாரி துபே ஆகியோர் கடந்த ஏழு ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர். இவர்கள் இருவரும் கொல்கத்தாவில் உள்ள லேக் கார்டன் விருந்தினர் மாளிகையில் நேற்று முன்தினம்  தங்கியுள்ளனர்.

அப்போது, திடீரென்று காதலி நிக்கு குமாரி துபேவை, காதலன் ராகேஷ் குமார் ஷா சுட்டுவிட்டு தன்னைத்தானே சுட்டுக் கொண்டுள்ளார். இதில், காதலி உயிர் பிழைத்துள்ளார். ஆனால்  காதலன் ராகேஷ் குமார் ஷா உயிரிழந்தார். இதுகுறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகிறார்கள்.