கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள மேட்டுப்பாளையம் பகுதியில் கடந்த 2019 ஆம் ஆண்டு காதலித்த ஜாதி மறுப்பு திருமணம் செய்து கொண்ட கனகராஜ் மற்றும் வர்ஷினி பிரியா ஜோடியை ஆணவ படுகொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கனகராஜ் சகோதரர் வினோத்குமார் தான் குற்றவாளி என கடந்த 23ஆம் தேதி நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. இந்த வழக்கில் மொத்தம் 4 பேர் கைது செய்யப்பட்ட நிலையில் சக்திவேல், ஐயப்பன் மற்றும் சின்னப்ப ராஜா ஆகியோர் விடுதலை செய்யப்பட்ட நிலையில் வினோத்குமாருக்கு மரண தண்டனை கூட வழங்கலாம் என கூறி தீர்ப்பை ஜனவரி 29ஆம் தேதிக்கு நீதிமன்றம் ஒத்திவைத்தது.

இந்த வழக்கு இன்று கோவை வன்கொடுமை சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கை விசாரித்த நீதிமன்றம் குற்றவாளி வினோத்குமார் அதிகபட்ச தண்டனையாக தூக்கு தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கியுள்ளது. மேலும் இதுபோன்ற  வன்கொடுமை  இனி  நடக்காமல் இருக்க இந்த தீர்ப்பு ஒரு பாடம் என்று கூறி நீதிபதி மரண தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கியுள்ளார்.