புதுச்சேரி மாநிலத்தில் உள்ள தவளைக்குப்பம் பகுதியில் சுந்தர் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கோவிலில் சாமி ஆடி குறி சொல்வார். இதன் மூலம் கிடைக்கும் பணத்தில் வாழ்க்கையை நடத்தி வந்தார். இவருடைய மனைவி கடந்த சில வருடங்களுக்கு முன்பாக விவாகரத்து பெற்று பிரிந்து சென்று விட்ட நிலையில் இவருடைய மகனுக்கும் திருமணமாகி தனியாக வசித்து வருகிறார்.

இதனால் சுந்தர் மட்டும் ஒரு வீட்டில் தனியாக இருந்துள்ளார். இந்நிலையில் சுந்தர் நேற்று அதிகாலை அவருடைய வீட்டின் அருகே ரத்த வெள்ளத்தில் சடலமாக கிடந்த நிலையில் அதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த அக்கம்பக்கத்தினர் உடனடியாக போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் சுந்தர் சடலத்தை மீட்டு பிரயோத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த நிலையில் பின்னர் இது பற்றி விசாரணை நடத்தியதில் கடந்த 3 வருடங்களுக்கு முன்பாக சுந்தரிக்கும் அவருடைய பக்கத்து வீட்டில் வசிக்கும் தமிழரசன் என்பவருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் தமிழரசன் கொத்தனாராக இருக்கும் நிலையில் முன்விரோதம் காரணமாக இருவரும் அடிக்கடி வாய் தகராறில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த நிலையில் மீண்டும் நேற்று இரவு அவர்களுக்குள் பிரச்சனை ஏற்பட்டதால் கோபத்தில் கிரைண்டர் கல்லை எடுத்து சுந்தர் தலையில் போட்டு தமிழரசன் கொலை செய்துள்ளார். எனவே தமிழரசனை காவல்துறையினர் கைது செய்தனர். மேலும் இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.