மேகாலயா மாநிலம் மேற்கு ஜெய்ன்டியா ஹில்ஸ் மாவட்டத்திலுள்ள சபாய் கிராமத்தை சேர்ந்த ஒரு குடும்பத்தினர் காட்டு காளான்களை சாப்பிட்டுள்ளனர். இதனால் அவர்களுக்கு உடல் நல பாதிப்பு ஏற்பட்ட நிலையில் அந்த குடும்பத்தை சேர்ந்த ரிவன் சகா சுசியாங் (8), கிட்லாங் டுசியாங்(12) வான்சலான் (15) ஆகிய மூன்று சிறுவர்கள் உயிரிழந்தனர். மேலும் 9 பேர் உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.