சென்னை எம்.ஜி.ஆர் நகரில் உதயகுமார் என்பவர் வசித்து வருகிறார்.  இவருக்கும், ஜெயரூபனி(20) என்பவருக்கும் கடந்த ஆண்டு திருமணம் நடந்தது. இவர் கூலி தொழிலாளியாக பணிபுரிந்து வருகிறார். இவர் அடிக்கடி மது குடித்துவிட்டு ஜெயரூபியுடன் தகராறில் ஈடுபட்டுள்ளார்.

இதனால் சில மாதங்களாகவே ஜெயரூபீனி கணவரை பிரிந்து தாய் வீட்டில் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் கடந்த 21ஆம் தேதி உதயகுமார் தனது மனைவியை அழைக்க  மாமியார் வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது அவர்கள் இருவருக்கும் இடையில் மீண்டும் தகராறு ஏற்பட்டது. இதில் விரக்தி அடைந்த ஜெயரூபனி வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.