நாட்டில் பொதுவாக அரசு ஊழியர்களுக்கு இருமுறை அகவிலைப்படி உயர்த்தப்படும். மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்த்தப்பட்ட பிறகு மாநில அரசுகளும் அகவிலைப்படி உயர்வு தொடர்பான அறிவிப்புகளை வெளியிடும். கடந்த ஜனவரி மாதம் அகவிலைப்படி உயர்த்தப்பட்ட நிலையில் தற்போது அரசு ஊழியர்கள் 50% அகவிலைப்படி பெற்று வருகிறார்கள். இதைத்தொடர்ந்து அடுத்ததாக 3 சதவீதம் வரை அகவிலை படியானது உயர்த்தப்பட வாய்ப்புள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது.

முன்னதாக கடந்த 9-ம் தேதி மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெற்ற நிலையில் அன்றைய தினமே அகவிலைப்படி உயர்வு குறித்து அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அறிவிப்புகள் வெளியாகவில்லை. இதைத்தொடர்ந்து தற்போது மத்திய அரசு ஊழியர்களுக்கு தீபாவளியை தொடர்ந்து அகவிலைப்படி உயர்வு குறித்து அறிவிப்பு வெளியாகலாம் என்று கூறப்படுகிறது. அவர்களுக்கு 3 சதவீதம் வரை உயர்த்தப்படலாம் என்று கூறப்படுகிறது. மேலும் நாட்டில் அதிகரிக்கும் விலைவாசி உயர்வு போன்றவற்றை கட்டுப்படுத்தும் விதமாக ஆண்டுக்கு இருமுறை அரசு ஊழியர்களுக்காக அகவிலைப்படி வழங்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கதாகும்..