
குன்னூர் அருகே பேருந்து கவிழ்ந்த விபத்தில் பலியானோர் குடும்பத்திற்கு பாஜக தமிழ்நாடு சார்பாக ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
பாஜக தலைவர் அண்ணாமலை தனது ஸ்க்ஸ் பக்கத்தில், குன்னூர் அருகே, 50 அடி பள்ளத்தில் சுற்றுலாப் பேருந்து கவிழ்ந்து ஏற்பட்ட விபத்தில் 8 பேர் உயிரிழந்துள்ளனர் என்ற செய்தியறிந்து மிகுந்த வேதனை அடைந்தேன். அவர்கள் குடும்பத்தினருக்கு பாஜக தமிழ்நாடு சார்பாக ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். காயமடைந்து, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் அனைவரும் விரைவில் குணமடைய இறைவனைப் பிரார்த்திக்கிறேன். அவர்களுக்கு உயர்தர சிகிச்சை வழங்க தமிழக அரசைக் கேட்டுக் கொள்கிறேன்” என தெரிவித்துள்ளார்.
குன்னூர் அருகே பேருந்து கவிழ்ந்து 8 பேர் பலி :
தென்காசி மாவட்டம் கடையத்திலிருந்து 54 சுற்றுலா பயணிகள் மற்றும் 2 ஓட்டுநர்களுடன் சென்ற பேருந்து நீலகிரி மாவட்டம் குன்னூர் – மேட்டுப்பாளையம் சாலையோர 50 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 8 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் விபத்துக்குள்ளான பேருந்தில் இருந்த 20க்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த விபத்தில் சிக்கிய பயணிகளில் 4 பேர் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த விபத்தில் நிதின் (வயது 15) , தேவி கலா (வயது 42), முருகேசன் (வயது 65), முப்பிடாதி (வயது 67) , கௌசல்யா (வயது 29), இளங்கோ (வயது 64), ஜெயா (வயது 50), தங்கம் (வயது 40) ஆகிய 8 பேர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தொடர்ந்து மீட்பு பணி நடைபெற்று வருகிறது.
குன்னூர் அருகே, 50 அடி பள்ளத்தில் சுற்றுலாப் பேருந்து கவிழ்ந்து ஏற்பட்ட விபத்தில் 8 பேர் உயிரிழந்துள்ளனர் என்ற செய்தியறிந்து மிகுந்த வேதனை அடைந்தேன். அவர்கள் குடும்பத்தினருக்கு @BJP4Tamilnadu சார்பாக ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
காயமடைந்து, மருத்துவமனையில்…
— K.Annamalai (மோடியின் குடும்பம்) (@annamalai_k) September 30, 2023