
சென்னை பெரம்பூரில் பகுஜன் சமாஜ் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் நேற்று படுகொலை செய்யப்பட்டது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனையடுத்து சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையில் பிஎஸ்பி தலைவர் ஆம்ஸ்ட்ராங்கின் உடலுக்கு பிரேத பரிசோதனை செய்யப்படுகிறது.
இதனிடையே, கொலைக்கு காரணமான உண்மையான குற்றவாளிகளை கைது செய்யும் வரை உடலை வாங்க மாட்டோம் என அவரது ஆதரவாளர்கள் மருத்துவமனை முன்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதனால், அங்கு பாதுகாப்புக்காக 800க்கு மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.