
கள்ளக்குறிச்சி காட்டு காலனி அருகே வடமருதூர் பகுதியில் பிரசாந்த் (26) என்பவர் வாழ்ந்து வந்துள்ளார். இவர் சென்னையில் உள்ள பல்பொருள் அங்காடியில் வேலை பார்த்து வந்தார். இந்நிலையில் நேற்று காலை அவர் தனது ஊருக்கு புறப்பட்டுள்ளார். அரசு பேருந்தில் ஏறி தனது ஊருக்கு சென்ற அவர் விக்கிரவாண்டியில் இறங்கினார். பின்னர் அங்குள்ள ஒரு கடையில் குளிர்பானம் வாங்கி குடித்துள்ளார்.
அப்போது திடீரென மயங்கி கீழே விழுந்த அவர் சம்பவ இடத்திலேயே இறந்துவிட்டார். இது தொடர்பாக அப்பகுதி மக்கள் விக்கிரவாண்டி காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். அந்த தகவலின் படி காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து உயிரிழந்தவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.