
குவைத் நாட்டின் மங்கப் நகரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்தில் இந்தியர்கள் உட்பட 50க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்தனர். இந்த நிலையில் தீ விபத்தில் 5 தமிழர்கள் உயிரிழந்துள்ளதாகதற்போது தகவல் வெளியாகியுள்ளது. அதாவது கேரளாவைச் சேர்ந்த தொழிலதிபருக்கு சொந்தமான அந்த குடியிருப்பில் 195 பேர் வசித்து வந்தனர்.
இந்நிலையில் நேற்று ஏற்பட்ட தீ விபத்தில் இந்தியாவை சேர்ந்த 40 பேர் உயிரிழந்தனர், 50க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். இதில், இறந்தவர்களுடைய விவரம் வெளிவராமல் இருந்த நிலையில், தற்போது 3 தமிழர்கள் பலியானதாக கூறப்படுகிறது.